குடிநீர் வினியோகிக்கப்படுமா?

Update: 2023-09-20 08:06 GMT

கணபதிபுரம் பேரூராட்சிக்கு உட்பட்ட காக்காத்தோப்பில் ஆதிதிராவிட சமுதாயத்திற்கான சுடுகாடு உள்ளது. அங்கு இறுதி சடங்கிற்கு தண்ணீர் தேவைக்காக ஆழ்குழாய் கிணறு அமைக்கப்பட்டுள்ளது. தற்போது ஆழ்குழாய் கிணற்றில் இருந்து தண்ணீர் எடுக்க பயன்படுத்தும் மின் மோட்டார் பழுதடைந்துள்ளது. இதனால், சுடுகாட்டில் இறுதி சடங்கிற்காக வரும் மக்கள் தண்ணீர் வசதியின்றி பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, பழுதடைந்த மின் மோட்டாரை சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். -நாகராஜன், ராஜாக்கமங்கலம்.

மேலும் செய்திகள்