வீணாகும் குடிநீர்

Update: 2023-09-17 17:31 GMT

நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் போலீஸ் நிலையம் அருகே பூலாம்பட்டி கூட்டு குடிநீர் திட்டத்தின் மூலம் ராசிபுரத்துக்கு செல்லும் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாக சாலையில் வழிந்தோடுகிறது. இதனால் அந்த சாலையில் செல்லும் பொது மக்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். மேலும் விபத்துகள் ஏற்படும் அபாயமும் உள்ளது. எனவே உடைந்த குடிநீர் குழாயை சீரமைக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

-சின்னவன், வெண்ணந்தூர், நாமக்கல்.

மேலும் செய்திகள்