ஆபத்தான மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி

Update: 2023-09-10 11:34 GMT

கரூர் மாவட்டம் நொய்யல் குறுக்கு சாலையில் பகுதியில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டு சுமார் 30 ஆண்டுகள் ஆவதால் தற்போது சிதிலமடைந்து உபயோகமின்றி ஆபத்தான நிலையில் காணப்படுகிறது. பொதுமக்கள் நடமாட்டத்தின்போது இந்த நீர்த்தேக்க தொட்டி இடிந்து விழுந்தால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்