ஆபத்தான நீர்த்தேக்க தொட்டி

Update: 2023-09-06 13:18 GMT

அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி பகுதியில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தெக்க தொட்டி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த நீர்த்தேக்க தொட்டி சிதிலமடைந்ததையடுத்து, அதன் அருகிலேயே புதிதாக ஒரு 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் ஆபத்தான நிலையில் உள்ள சிதிலமடைந்த நீர்த்தேக்க தொட்டி அகற்றப்படாமல் உள்ளது. எனவே பொதுமக்கள் நடமாட்டத்தின்போது இந்த நீர்த்தேக்க தொட்டி இடிந்து விழுந்தால் உயிரிழப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்