விபத்து அபாயம்

Update: 2023-09-03 08:38 GMT

ஈத்தாமொழியில் இருந்து ராஜாக்கமங்கலம் செல்லும் மேற்கு கடற்கரை சாலையில் துணை மின்நிலையம் உள்ளது. இந்த துணை மின்நிலையத்தின் அருகில் சாலையின் நடுவே கூட்டுக்குடிநீர் திட்டத்திற்காக பதிக்கப்பட்டுள்ள குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாக சாலையில் பாய்கிறது. மேலும் அந்த இடத்தில் சாலை சேதமடைந்து பள்ளம் ஏற்பட்டு தண்ணீர் தேங்கி நிற்பதால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் நலன்கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சேதமடைந்த குழாயை சரி செய்வதுடன், சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளத்தையும் சீரமைக்க ேவண்டும். 

மேலும் செய்திகள்