கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள மருதூர் பேரூராட்சி குப்புரெட்டிபட்டி வடக்கு மேடு பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்கள் போதிய குடிநீர் இன்றி பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். பொதுமக்கள் குடிப்பதற்கும், சமைப்பதற்கும், தங்களின் அன்றாட தேவைகளுக்கும் போதிய குடிநீர் இன்றி வேலைக்கு செல்பவர்கள், பள்ளி, கல்லூரி செல்பவர்கள் குறித்த நேரத்திற்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.