கரூர் வேலுசாமிபுரத்தில் சாலையோரம் குடிநீர் குழாய்கான வால்வு அமைக்கப்பட்டுள்ளது. இந்த வால்வில் அடைப்பு ஏற்பட்டுவிட்டால் அதனை சரிசெய்யும் வகையில் இவற்றை சுற்றி தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. இந்த தொட்டி சாலையோரத்தில் அமைக்கப்பட்டுள்ளதாலும், சிலாப் கொண்டு மூடப்படாமல் உள்ளதாலும் வாகன ஓட்டிகள் நிலைதடுமாறி இந்த தொட்டியில் வாகனத்தை விட்டு விபத்தில் சிக்கிக்கொள்கின்றனர். மேலும் இரவு நேரத்தில் இந்த தொட்டி இருப்பது தெரியாமல் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் இதில் வாகனத்தை விட்டு நிலை தடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.