பொதுமக்கள் அவதி

Update: 2023-08-30 10:22 GMT

கோவை பீளமேடு காந்தி மாநகரில் அரசு வணிக வளாகம் பின்புறம் உள்ள பகுதியில் மழைநீர் வடிகால் இல்லை. இதன் காரணமாக அங்கு மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி வருகிறது. இதனால் குழந்தைகளை வைத்துக்கொண்டு பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள். மேலும் அந்த பகுதியில் ஆக்கிரமிப்புகளும் அதிகரித்து வருவதால், மழைநீர் வடிகால் அமைக்க இடவசதியும் குறைவாகவே உள்ளது. எனவே இந்த பிரச்சினைக்கு அதிகாரிகள் உரிய தீர்வு காண வேண்டும்.

மேலும் செய்திகள்