தேங்கி நிற்கும் மழைநீர்

Update: 2023-08-30 10:20 GMT

கோவை மாநகராட்சி 70-வது வார்டு லிங்கப்ப செட்டி வீதி 2-வது சந்து பகுதியில் மழைநீர் தேங்கி கிடக்கிறது. இதன் காரணமாக கொசுக்கள் உற்பத்தியாகி தொற்று நோய் பரவும் அபாயம் காணப்படுகிறது. இதனால் அந்த பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள். சில நேரங்களில் குழந்தைகள், பெரியவர்கள் வழுக்கி விழுந்து காயம் அடைகின்றனர். எனவே அங்கு மழைநீர் தேங்காத வகையில் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்