வீணாகும்‌‌ குடிநீர்

Update: 2023-08-27 08:29 GMT

இரணியலில் இருந்து ராஜாக்கமங்கலம் செல்லும் சாலையோரம் சரல் தபால் நிலையம் உள்ளது. இந்த தபால் நிலையத்தின் அருகில் தரைமட்டத்தில் கூட்டுக்குடிநீர்தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. இந்த தொட்டியில் இணைக்கப்பட்டுள்ள குழாயில் கசிவு ஏற்பட்டு குடிநீர் வீணாக சாலையில் பாய்கிறது. இதனால், அந்த வழியாக செல்லும் பாதசாரிகள், வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். எனவே, குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பை சீரமைத்து குடிநீர் வீணாவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-டி.தேவதாஸ், ராமநாதபுரம்.

மேலும் செய்திகள்