மாசடையும் தாமிரபரணி

Update: 2023-08-23 16:01 GMT

பாபநாசம் கோவில் படித்துறையில் தாமிரபரணி ஆற்றில் புனித நீராடும் சில பக்தர்கள் பழைய துணிகளை ஆற்றிலே வீசி செல்கின்றனர். இதனால் தண்ணீர் மாசடைவதுடன் ஆற்றில் குளிக்கும் பக்தர்களின் கால்களில் துணிகள் சிக்கி நிலைதடுமாறச் செய்கிறது. எனவே பக்தர்கள் பழைய துணிகளை ஆற்றுக்கு வெளியே உரிய இடத்தில் போட்டு செல்வதை அதிகாரிகள் கண்காணிக்க வேண்டுகிறேன்.

மேலும் செய்திகள்