குடிநீர் பற்றாக்குறை

Update: 2023-08-16 11:10 GMT

திருச்சி மாவட்டம், துறையூர் வட்டம், பச்சபெருமாள்பட்டி ஊராட்சி 11-வது வார்டு அண்ணா நகரில் வசிக்கும் பொதுமக்கள் கடந்த 3 மாதங்களாக முறையான குடிநீர் கிடைக்காமல் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் அடிப்படை தேவைக்காக அருகில் உள்ள பகுதிகளில் இருந்து தண்ணீர் எடுத்து வரும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் இப்பகுதியில் இருந்து வெளியூர்களுக்கு வேலைக்கு செல்பவர்கள் மற்றும் பள்ளி கல்லூரி செல்லும் மாணவ- மாணவிகள் குறித்த நேரத்திற்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்