வீணாகும் குடிநீர்

Update: 2023-08-13 11:40 GMT

அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் வட்டம், கொடுக்கூரில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. இந்த நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டு பல ஆண்டுகள் ஆனதால் இந்த தொட்டியில் இருந்து பொதுமக்களுக்கு குடிநீர் திறந்து விடும் வால்வில் பழுது ஏற்பட்டு தண்ணீர் திறக்கும்போது அதிக அளவில் தண்ணீர் வெளியேறி ஆறுபோல் சென்று வீணாகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்