நெல்லிக்குப்பம் நகராட்சி 30-வது வார்டு காமராஜ் நகர் பகுதியில் கடந்த 10 நாட்களாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் குடிநீருக்காக அப்பகுதி பொதுமக்கள் வெகுதூரம் செல்லும் நிலை உள்ளதால் கடும் அவதி அடைந்து வருகின்றனர். எனவே பொதுமக்கள் நலன் கருதி அப்பகுதியில் விரைந்து குடிநீா் வினியோகம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?