திறக்கப்படாத குடிநீர் சுத்திகரிப்பு நிலையம்

Update: 2023-08-09 13:55 GMT

காஞ்சீபுரம், வாலாஜாபாத் ஒன்றியம் களியனூர் ஊராட்சியில் பல லட்சம் செலவில் குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இது பல மாதங்கள் ஆகியும் இன்னும் பயன்பாட்டுக்கு வராமலேயே பாழடைந்து வருகிறது. ஆகையால் இந்த குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தை செயல்பட வைத்து கிராம மக்களுக்கு சுகாதாரமான குடிநீரை வழங்க சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்