கரூர் மாவட்டம் மணவாடி ஊராட்சி சின்னமநாயக்கன்பட்டி பஸ் நிறுத்தம் என்பது கரூர் -பாளையம் சாலையில் அமைந்துள்ளது. இந்த பஸ் நிறுத்த பகுதியில் குடியிருக்கும் குடியிருப்பு வாசிகளுக்காகவும், பஸ் ஏறுவதற்காக வரும் ஜோதி நகர், கற்பகா நகர், ராசி நகர், பழனியப்பா நகர், கொங்கு நகர், சின்னத்தம்பிபாளையம், கத்தாளபட்டி, பெரியார் நகர், செல்வ நகர், சின்னநாயக்கன்பட்டி மற்றும் சுற்றுப்பகுதிகளை சேர்ந்த பொதுமக்களின் தாகத்தை தீர்க்கும் வகையிலும் கத்தாளபட்டி பிரிவு சாலை அருகே நீர்த்தேக்க தொட்டி ஒன்று மணவாடி ஊராட்சி நிர்வாகத்தின் சார்பில் வைக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த தொட்டி பல மாதங்களாக குடிநீர் நிரப்பப்படாமல் வரண்டு காணப்படுகிறது. இதனால் தற்போது நிலவும் கடும் வெயிலில் பயணித்து அந்த பகுதிக்கு வரும் பொதுமக்கள் தாகம் தீர்க்க முடியாமல் அவதிப்படுகின்றனர். எனவே உரிய அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு நீர்த்தேக்க தொட்டியில் குடிநீர் நிரப்ப வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.