உப்பு தண்ணீர் வேண்டும்

Update: 2023-08-09 10:34 GMT

கோவை மாநகராட்சி 26-வது வார்டு பிளேக் மாரியம்மன் கோவில் வீதி அருகே கட்டபொம்மன் வீதியில் உப்பு தண்ணீர் கிடைக்காமல் பொதுமக்கள் மிகவும் அவதிப்பட்டு வருகிறார்கள். குறிப்பாக அன்றாட தேவைக்கு பயன்படுத்த தண்ணீர் இன்றி சிரமப்பட்டு வருகிறார்கள். அங்கு உப்பு தண்ணீர் தொட்டி அமைத்தால், அவர்களது சிரமம் தீர வழி கிடைக்கும். எனவே இதற்கு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும் செய்திகள்