பழுதடைந்த குடிநீர் தொட்டி

Update: 2023-08-06 16:56 GMT

சேலம் சூரமங்கலம் மண்டலம் 18-வது வார்டு மெய்யனூர் பனங்காடு பகுதியில் குடிநீர் தொட்டி பழுதடைந்துள்ளது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் குடிநீர் கிடைக்காமல் அவதியடைகின்றனர். இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து குடிநீர் தொட்டியை சீரமைக்க வேண்டும்.

-ராமன், மெய்யனூர், சேலம்.

மேலும் செய்திகள்