ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இதனால் பொதுமக்கள் குடிநீருக்காக நீண்ட தூரம் அலைந்து திரிய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. எனவே பொதுமக்களின் குடிநீர் தட்டுப்பாட்டினை போக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.