குடிநீர் தட்டுப்பாடு

Update: 2023-08-02 12:36 GMT

அரியலூர் மாவட்டம், தா.பழூர் ஊராட்சி ஒன்றியம், இருக்கையூர் ஊராட்சி கோட்டியல் கிராமத்தில் உள்ள வடக்கு தெருவில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களுக்கு போதுமான குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் வேலைக்கு செல்பவர்கள் மற்றும் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகள் குறித்த நேரத்திற்கு செல்ல முடியாமல் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் தங்களின் அன்றாட தேவைகளுக்கு வேண்டிய தண்ணீரை அருகில் உள்ள கிராமங்களில் இருந்து எடுத்து வரும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்