சுத்தமான குடிநீர் வேண்டும்

Update: 2023-07-30 14:03 GMT

மயிலாடுதுறை 30-வது வார்டு தூங்கனாங்குளம் தென்கரை,வடகரை, கீழ்கரை பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு நகராட்சி சார்பில் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக குடிநீர் கலங்கலாக வருகிறது. அந்த குடிநீரை குடிக்கும் போது பொதுமக்களுக்கு உடல்நலகோளாறு ஏற்படுகிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் சுத்தமான குடிநீர் கிடைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்



மேலும் செய்திகள்