குடிநீர் தட்டுப்பாடு

Update: 2023-07-26 15:58 GMT

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே தத்தனூர் வளவெட்டிக்குப்பம் தெற்கு ஏரிக்குகரை தென்புறம் மற்றும் மேல் புறம் பகுதிகளில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு கடந்த 6 மாதங்களாக முறையாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் இப்பகுதி மக்கள் சமைப்பதற்கும் மற்றும் தங்களின் அன்றாட தேவைக்கும் போதுமான தண்ணீர் இன்றி அருகில் உள்ள கிராமங்களுக்கு சென்று தண்ணீர் எடுத்து வரும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ- மாணவிகள் மற்றும் வேலைக்கு செல்பவர்கள் குறித்த நேரத்திற்கு செல்ல முடியாமல் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து இப்பகுதிகள் ஏற்பட்டுள்ள குடிநீர் தட்டுப்பாட்டை போக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்