மூடப்பட்ட ஆழ்துளை கிணறு

Update: 2023-07-26 14:18 GMT

கரூர் மாவட்டம் நொய்யல் அருகே செல்வநகரில் ஒன்றிய பொது நிதி 2016- 2017-ம் நிதி ஆண்டில் ரூ.4.90 லட்சம் மதிப்பீட்டில் ஆழ்துளை கிணறு அமைத்து முத்தனூர் வரை குடிநீர் குழாய் அமைத்தல் பணி நடைபெற இருந்தது. இந்நிலையில் சில காரணங்களுக்காக முத்தனூரில் தார் சாலை ஓரத்தில் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு மின் மோட்டார் பொருத்தப்பட்டு அதிலிருந்து முத்தனூரில் உள்ள மேல்நிலைத் தொட்டிக்கு குடிநீர் ஏற்றப்பட்டு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் மின்மோட்டோருக்கு செல்லும் மின் இணைப்பு வயரை திருடர்கள் வெட்டு எடுத்து சென்று விட்டனர். அதன் காரணமாக குடிநீர் குழாயில் இருந்து குடிநீர் செல்வது தடையானது. அதனைத் தொடர்ந்து கடந்த சில ஆண்டுகளாக அப்படியே உள்ளது. இந்நிலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன் தார் சாலை விரிவாக்க பணி நடைபெற்றது. அப்போது அந்த ஆழ்துளை கிணறை மூடிவிட்டனர். இதனால் அரசுக்கு ரூ.4.90 லட்சம் இழப்பு ஏற்பட்டுள்ளது. எனவே மூடப்பட்ட ஆழ்துளை கிணற்றை பயன்பாட்டிற்கு கொண்டுவர சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்