குடிநீர் தட்டுப்பாடு

Update: 2023-07-26 11:41 GMT

திருச்சி மாவட்டம், அந்தநல்லுர் ஒன்றியம், பெருகமணி கிராமம், மீனாட்சிபுரம் குடித்தெருவில் சுமார் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு கடந்த சில நாட்களாக போதுமான அளவு குடிநீர் வினியோகம் செய்யப்படாததால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகள் மற்றும் வேலைக்கு செல்பவர்கள் குறித்த நேரத்திற்கு செல்ல முடியாமல் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் இப்பகுதி மக்கள் குடிப்பதற்கும், சமைப்பதற்கும், தங்களின் அன்றாட தேவைகளுக்கும் போதுமான தண்ணீர் இன்றி அருகில் உள்ள பகுதிகளுக்கு சென்று தண்ணீர் எடுத்து வரும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து இப்பகுதியில் ஏற்பட்டுள்ள தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்