குடிநீர் குழாயில் உடைப்பு

Update: 2023-07-26 11:41 GMT

கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி போலீஸ் நிலையம் அருகில் எட்டையாக்கவுண்டனூர் செல்லும் சாலைக்கு அடியில் புதைக்கப்பட்டுள்ள குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு, குடிநீர் வீணாகி வருகிறது. குழாயில் இருந்து வெளியேறும் தண்ணீரானது சாலையில் தேங்கி நிற்பதால் அப்பகுதியில் பெரிய அளவில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். இரவு நேரத்தில் இருசக்கார வகானத்தில் செல்லும் வாகன ஓட்டிகள் சாலையில் பள்ளம் இருப்பது தெரியாமல் அதன் அருகே வந்து பிரேக் அடித்து நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்து வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்