குடிநீர் தட்டுப்பாடு

Update: 2023-07-23 12:00 GMT

திருச்சி மாவட்டம், பொன்மலைப்பட்டியில் உள்ள அடைக்கல அன்னை நகர் பகுதியில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களுக்கு குடிநீர் சரியாக வருவதில்லை. இப்பகுதி மக்களுக்கு 20 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இதனால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகள் மற்றும் வேலைக்கு செல்பவர்கள் குறித்த நேரத்திற்கு செல்ல முடியாமல் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் இப்பகுதி மக்கள் அருகில் உள்ள பகுதிகளில் இருந்து தண்ணீரை எடுத்து வந்த தங்களின் அன்றாட தேவைகளுக்கு பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து, அடைக்கல அன்னை நகர் பகுதியில் சீரான குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்