குடிநீர் பிரச்சினை தீர்க்கப்படுமா?

Update: 2023-07-23 11:30 GMT

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் ஒன்றியம் ஆனைகரன்சத்திரம் பகுதியில் திட்டுப்படுகை கிராமம் உள்ளது. இக்கிராமத்தில் பொதுமக்கள் வசதிக்காக சிறிய குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. இந்த தொட்டி முறையான பராமரிப்பின்றி காணப்படுகிறது. இதனால் கடந்த சில வாரங்களாக குடிநீர் தொட்டியில் இருந்து குடிநீர் வருவதில்லை. இதன்காரணமாக பொதுமக்கள் குடிநீருக்காக நீண்ட தூரம் செல்ல வேண்டிய நிலை உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் ஏற்பட்டுள்ள குடிநீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.



மேலும் செய்திகள்