குடிநீர் தட்டுப்பாடு

Update: 2023-07-19 11:27 GMT

திருச்சி மாவட்டம், காமநாயக்கன்பாளையம் பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் கடந்த சுமார் 10 நாட்களாக போதுமான அளவு குடிநீர் வினியோகம் செய்யப்படாததால் இப்பகுதி மக்கள் பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர். இதனால் குடிநீருக்காக இப்பகுதி மக்கள் அருகில் உள்ள சிறுகமணி பஞ்சாயத்திற்கு உட்பட்ட பகுதிகளுக்கு சென்று தண்ணீர் எடுத்து வரும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவ-மாணவிகள், வேலைக்கு செல்பவர்கள் குறித்த நேரத்திற்கு செல்ல முடியாமல் பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து, குடிநீர் தேவையை பூர்த்தி செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்