நடவடிக்கை தேவை

Update: 2023-07-19 08:34 GMT

ஈத்தாமொழி நெடுஞ்சாலையோரத்தில் தனியார் காய்கறி கடை உள்ளது. இந்த காய்கறி கடையின் அருகில் சாலையில் பதிக்கப்பட்டுள்ள குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் சாலையில் வீணாக பாய்கிறது. கடந்த 10 நாட்களாக குடிநீர் வீணாகி வருகிறது. எனவே, குழாயின் உடைப்பை சீரமைத்து குடிநீர் வீணாவதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்