சாலையில் செல்லும் குடிநீர்

Update: 2023-07-16 15:11 GMT


கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் அஜ்ஜனூர் சிறுவாணி சந்திப்பில் இருந்து பொம்மனம்பாளையம் வழியாக பாரதியார் பல்கலைக்கழகம், மருதமலை பகுதிகளுக்கு குடிநீர் குழாய் செல்கிறது. இந்த குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் சாலையில் வழிந்ேதாடுகிறது. இதனால் அந்தப்பகுதிகளுக்கு சீராக குடிநீர் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. அதனால் அங்கு வசிக்கும் பொதுமக்கள் தண்ணீரின்றி மிகவும் சிரமப்பட்டு வருகிறார்கள். எனவே உடைந்து காணப்படும் குடிநீர் குழாயை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆவன செய்ய வேண்டும்.

செல்வன், கோவை.

மேலும் செய்திகள்