வாய்க்கால் தூர்வாரப்படுமா?

Update: 2023-07-16 12:26 GMT

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சட்டநாதபுரம் ஊராட்சி தெட்சிணாமூர்த்தி நகரில் பாசன வாய்க்கால் உள்ளது. இது முறையான பராமரிப்பின்றி செடி,கொடிகள் வளர்ந்து புதர்மண்டி கிடக்கிறது. இதனால் வாய்க்கால் விஷப்பூச்சிகளின் கூடாரமாக மாறிவருகிறது. இந்த விஷப்பூச்சிகள் இரவு நேரங்களில் குடியிருப்புகளுக்குள் புகுந்துவிடுகின்றன. மேலும், வாய்க்காலில் கழிவுநீர் தேங்கி கிடக்கிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வாய்க்காலை தூர்வாரிடவும், கழிவுநீரை அகற்றவும் நடவடிக்கை எடுப்பார்களா?



மேலும் செய்திகள்