கடலூர் மாவட்டம் நல்லூர் ஒன்றியம் பூவனூர் ஊராட்சியில் குடிநீருக்காக பயன்படுத்தப்பட்ட கைப்பம்பு பயன்பாடின்றி காட்சிப்பொருளாக உள்ளது. இதனால் அப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், பொதுமக்கள் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே கைப்பம்பை சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்பதே அப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாகும்.