பயன்பாடற்ற நீர்த்தேக்க தொட்டி

Update: 2023-07-09 11:45 GMT

கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையத்தில் கரூர் சாலையோரம் விநாயகர் கோவில் உள்ளது. இப்பகுதி மக்களுக்காகவும், பக்தர்களுக்காகவும் கோவிலின் அருகே ஆழ்குழாய் கிணற்றுடன் கூடிய நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. இந்த நீர்த்தேக்க தொட்டியின் ஆழ்குழாய் கிணற்றில் அமைக்கப்பட்டுள்ள மின்மோட்டார் பழுதடைந்து தற்போது பயன்பாடு இன்றி உள்ளது. மேலும் நீர்த்தேக்க தொட்டியும் சிதிலமடைந்து வருகிறது. இதனால் இப்பகுதி மக்கள் போதிய தண்ணீர் இன்றி பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்