தூர்வாரப்படாத சந்தேரி

Update: 2023-07-09 11:45 GMT

அரியலூர் மாவட்டம், செந்துறை வட்டம், ஆனந்தவாடி ஊராட்சி ஆ.சோழங்குறிச்சி கிராமம் ஶ்ரீ பச்சையம்மன் கோவில் அருகே உள்ள சந்தேரி என்ற குடிநீர் ஏரியினை இப்பகுதி மக்கள் மட்டும் இன்றி இக்கிராமத்தை சுற்றியுள்ள 10-க்கும் மேற்பட்ட கிராம மக்களும் பயன்படுத்தி வந்தனர். இந்த நிலையில் சந்தேரி முறையாக தூர்வாரப்படாததாலும், புற்கள், பாசிகள் படிந்து உள்ளதாலும் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. மேலும் தூர்வாரப்படாமல் உள்ளதால் மழைபெய்யும்போது மழைநீரை முழுமையாக சேகரிக்க முடியாத நிலை ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. இதனால் வெயில் காலங்களில் இப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்