பயனற்ற நீர்த்தேக்க தொட்டி

Update: 2023-07-02 11:31 GMT

கரூர் மாவட்டம், வேலாயுதம்பாளையம்- கொடுமுடி செல்லும் சாலையில் உள்ள நொய்யல் ரெயில்வே கேட் அருகே குடியிருந்து வரும் பொதுமக்களின் நலன் கருதி அங்கு ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு அதில் மின்மோட்டார் பொருத்தப்பட்டு அதன் அருகே நீர்த்தேக்க தொட்டி வைக்கப்பட்டு அதிலிருந்து பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் ஆழ்துளை கிணற்றில் இருந்த மின் மோட்டார் பழுதடைந்த காரணத்தால் மின்மோட்டாரை பழுது நீக்க எடுத்துச் சென்றனர். அதன் பிறகு மின்மோட்டார் பொருத்தப்படவில்லை. அதன் காரணமாக பல ஆண்டுகளாக நீர்த்தேக்க தொட்டி பயனற்று வீணாகி வருகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.  

மேலும் செய்திகள்