வீணாகும் குடிநீர்

Update: 2023-07-02 10:37 GMT

பொள்ளாச்சி-திருப்பூர் சாலையோரத்தில் அம்பராம்பாளையம் கூட்டுக்குடிநீர் திட்டத்தின் கீழ் குழாய்கள் பதிக்கப்பட்டு உள்ளன. கனரக வாகன போக்குவரத்து அதிகரித்ததால், அந்த குழாய்கள் பல இடங்களில் உடைந்து குடிநீர் வீணாக வெளியேறி வருகிறது. இதனால் குடிநீர் வினியோகம் பாதிக்கப்படுகிறது. மேலும் அந்த வழியாக நடந்து செல்பவர்கள் மீது வாகனங்கள் தண்ணீரை பீய்ச்சியடித்து செல்லும் நிலை உள்ளது. எனவே உடைந்த குடிநீர் குழாய்களை மாற்றி அமைக்க வேண்டும்.

மேலும் செய்திகள்