தரமற்ற குடிநீர் விற்பனை

Update: 2023-06-28 12:07 GMT

தரமற்ற குடிநீர் விற்பனை

பல்லடம் மற்றும் சுற்றுவட்டாரப்பகுதிகளில், ஒரு சில இடங்களில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பொதுமக்கள் குடிநீர் தேவைக்காக, லாரிகள், வேன்களில் கொண்டுவரும் குடிநீரை விலைக்கு வாங்கி பயன்படுத்துகின்றனர். மேலும் பலர் கேன்கள் மற்றும் பாக்கெட்டுகளில், விற்பனையாகும் குடிநீரை வாங்கி பயன்படுத்துகின்றனர். குடிநீர் பாட்டில்கள் மற்றும் கேன்களில் தரச்சான்று மற்றும் காலாவதியாகும் தேதி ஆகியவை அச்சிடப்பட்டு இருக்க வேண்டும்.பல்லடம் பஸ் நிலையம், கடைவீதி, போன்ற இடங்களில், கடைகளில் விற்கப்படும், குடிநீர் பாக்கெட்டுகள், தரமற்றதாகவும், பாக்கெட்டுகளில் துர்நாற்றம் வீசுவதாகவும் உள்ளது.எனவே தரமில்லாத குடிநீர் விற்பனையை அதிகாரிகள் கண்காணித்து, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அருள்புரம்,முருகன்,

8763843835

மேலும் செய்திகள்