குடிநீர் பிரச்சினை தீர்க்கப்படுமா?

Update: 2023-06-25 11:29 GMT

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் ஒன்றியம் ஆனைக்காரன் சத்திரம் பகுதியில் திட்டுப்படுகை கிராமம் உள்ளது. இந்த பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு முறையாக குடிநீர் கிடைப்பதில்லை. இதனால் தினமும் தண்ணீரின்றி சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். வீடுகளில் பொருத்தப்பட்டுள்ள குடிநீர் குழாய்களிலும் சரியாக தண்ணீர் கிடைப்பதில்லை. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட கிராம மக்களின் குடிநீர் பிரச்சினையை தீர்க்க வேண்டும்.


மேலும் செய்திகள்