சென்னை பரங்கிமலை மாங்காளியம்மன் கோவில் தெரு, ராணுவ அதிகாரிகள் மையத்திற்கு செல்லும் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் கசிந்து சாலையில் தேங்கியபடி இருக்கின்றது. நீண்ட நாட்களாக சாலையில் தேங்கும் குடிநீர், கழிவுநீராக மாறி துர்நாற்றம் வீச தொடங்குகிறது. எனவே சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய்தொற்று பரவும் முன்பு சம்பந்தபட்ட அதிகாரிகள் குடிநீர் குழாயை சரி செய்ய வேண்டும். மேலும் குடிநீர் வீணாவதையும் தடுக்க வேண்டும்.