தேங்கி நிற்கும் தண்ணீர்

Update: 2023-06-07 10:45 GMT

உப்பிலியபுரம் ஒன்றியம் தளுகை ஊராட்சி டி.முருங்கப்பட்டி பிள்ளையார் கோவில் அருகே அமைக்கப்பட்டுள்ள மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அருகில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் இவற்றில் இருந்து அதிக அளவில் கொசுக்கள் உற்பத்தி ஆவதுடன் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு வருகிறது. இதனால் இப்பகுதியில் நோய் தொற்று பரவும் அபாயம் உள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்