குளம் தூர்வாரப்படுமா?

Update: 2023-06-04 10:48 GMT

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி வட்டம் கொள்ளிடம் ஒன்றியம் சோதியக்குடி பஞ்சாயத்தில் சிதம்பரநாதபுரம் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் உள்ள சிவன் கோவில் அருகே குளம் ஒன்று தூர்வாரப்படாமல் உள்ளது. இதனால் குளம் மற்றும் கரை முழுவதும் செடி,கொடிகள் வளர்ந்து காணப்படுகிறது. இதன்காரணமாக பொதுமக்கள், கோவிலுக்கு வரும் பக்தர்கள் குளத்து நீரை பயன்படுத்த முடியாத சூழல் நிலவுகிறது. மேலும், குளத்துக்கு முறையான படித்துறை மற்றும் தடுப்புச்சுவரும் அமைக்கப்படவில்லை.எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ள குளத்தை தூர்வாரிட நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்