சுத்தமான குடிநீர் வேண்டும்

Update: 2023-05-31 11:14 GMT

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி வட்டம் திருக்கடையூர் ஊராட்சி அபிஷேகக்கட்டளையில் மேல்நிலை நீர்த்தேக்கதொட்டி உள்ளது. அதில் இருந்து அந்த பகுதியில் உள்ள வீடுகளுக்கு குடிநீர் வழங்கப்படுகிறது. கடந்த சில நாட்களாக குடிநீர் கலங்களாகவும், தூசி நிறைந்தும் வருகிறது. இதனால் குடிநீரை பயன்படுத்த முடியாத சூழல் நிலவுகிறது. மேலும், இதே நிலை நீடித்தால் குடிநீரை பயன்படுத்துபவர்களுக்கு உடல்நலக்கோளாறுகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் உள்ளவர்களுக்கு சுத்தமான குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே கோரிக்கையாகும்.



மேலும் செய்திகள்