ஏரியை தூர்வாருவது அவசியம்

Update: 2023-05-28 16:09 GMT
சேத்தியாத்தோப்பு அருகே உள்ள பூதங்குடி கிராமத்தில் வீராணம் ஏரி அமைந்துள்ளது. இந்த ஏரியின் முடிவில் ஆகாயத்தாமரை அதிக அளவில் வளர்ந்து காணப்படுகிறது. இதனால் ஏரியில் அதிக அளவில் தண்ணீர் சேமித்து வைக்க முடியாத நிலை ஏற்படுகிறது. எனவே ஏரியை தூர்வார சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்