இடிந்து விழும் நிலையில் மேல்நிலை தொட்டி

Update: 2023-05-21 16:48 GMT

பெரியகுளம் தாலுகா பொம்மிநாயக்கன்பட்டியில் உள்ள மேல்நிலை குடிநீர் தொட்டி பராமரிப்பு இல்லாததால் சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. தொட்டியை தாங்கி நிற்கும் தூண்களில் சிமெண்டு பூச்சுகள் பெயர்ந்து விழுந்து கட்டுமான கம்பிகள் வெளியே தெரிகின்றன. இதனால் எந்த நேரத்திலும் மேல்நிலை குடிநீர் தொட்டி இடிந்து விழும் அபாயம் உள்ளது. எனவே சீரமைப்பு பணிகளை விரைவாக மேற்கொள்ள வேண்டும்.

மேலும் செய்திகள்