மதுரை மாவட்டம் வாடிப்பட்டி தாலுகா டி. ஆண்டிபட்டி கிராமத்தில் மயானம் செல்லும் பாதையில் ஊருணி உள்ளது. இந்த ஊருணி நீர் விவசாயத்திற்காகவும் கால்நடைகளின் குடிநீர் ஆதாரமாகவும் உள்ளது. ஆனால் தற்போது கழிவநீர் ஊருணியில் கலந்து பயன்படுத்த முடியாத வகையில் மாசடைந்து உள்ளது. ஊருணியில் கழிவுநீர் கலப்பதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.