காட்சி பொருளான தண்ணீர்தொட்டி

Update: 2023-05-17 15:36 GMT

சேலம் மாவட்டம் மேச்சேரியை அடுத்த எம்.காளிப்பட்டி கிராமம் மூர்த்திபட்டி 10-வது வார்டு மாரியம்மன் கோவில் அருகே குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டது. இந்த தொட்டியில் சில நாட்கள் மட்டுமே தண்ணீர் வந்து கொண்டிருந்தது. பின்னர் அது காட்சி பொருளாகவே உள்ளது. இதனால் அந்த பகுதி மக்களுக்கு அடிக்கடி தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படுகிறது. இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே அந்த குடிநீர் தொட்டியில் தினமும் தண்ணீர் வழங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?

--ரமேஷ், எம்.காளிப்பட்டி, சேலம்.

மேலும் செய்திகள்