தேங்கி நிற்கும் மழைநீர்

Update: 2023-05-07 10:55 GMT
கரூர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக அவ்வபோது மழை பெய்து வருகிறது. இந்தநிலையில் கரூர் வாழைக்காய் மண்டி எதிரே கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த மழைநீர் தேங்கி நிற்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அவதி வருகின்றனர். மேலும் எப்போது மழை பெய்தாலும் இந்த இடத்தில் அதிக அளவில் மழைநீர் தேங்கி நிற்கும். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்