குளத்திற்கு சுற்றுச்சுவர் அமைக்கவேண்டும்

Update: 2022-07-22 11:54 GMT
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் ருக்குமணி குளம் உள்ளது. இந்த குளத்தின் வடக்கு வடகரையில் சுற்றுச்சுவர் இல்லை. மேலும் சாலை மிகவும் குறுகலாக உள்ளது. நகரின் மத்தியில் அமைந்துள்ள இந்த சாலையின் வழியாக தஞ்சை, பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு ஆகிய பகுதிகளுக்கு தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. மேலும் நெடுஞ்சாலை துறை ஆய்வு மாளிகை மற்றும் அரசு அலுவலகங்கள் அமைந்துள்ளன. இந்த சாலை குறுகிய சாலையாக உள்ளதால் அந்த வழியாக செல்லும் வாகனங்கள் மிகவும் அச்சதுடன் சென்று வருகின்றனர். எனவே வாகன ஓட்டிகள் நலன் கருதி குளத்தின் வடக்கு கரையில் சுற்றுச்சுவர் அமைக்கப்படுவதோடு, சாலையை அகலப்படுத்தி தர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


மேலும் செய்திகள்