குடிநீர் குழாயில் உடைப்பு

Update: 2023-04-26 11:49 GMT

திருச்சி மாவட்டம், துவாக்குடி அண்ணா வளைவு பகுதி காமராஜர் வளைவு அருகில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு குடிநீர் முழுவதும் சாக்கடையுடன் கலந்து கொண்டிருக்கிறது. இதனால் இப்பகுதி மக்கள் போதிய குடிநீர் இன்றி பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். 

மேலும் செய்திகள்