கரூர் மாவட்டம், நொய்யல் அருகே சொட்டையூரில் வேலாயுதம்பாளையம்-நொய்யல் நெடுஞ்சாலையில் தார்சாலை ஓரத்தில் சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு அப்பகுதி பொதுமக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் ஆள்துளை கிணறு அமைக்கப்பட்டு அடிபம்பு பொருத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் அப்பகுதி மக்கள் குடிநீரை எடுத்து பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் இப்பகுதியில் தெருக்களில் குடிநீர் குழாய் அமைக்கப்பட்டு பயன் அடைந்து வருகின்றனர். இந்நிலையில் தார் சாலை விரிவாக்கத்தின் காரணமாக தார்சாலை அடிபம்பு அருகே செல்கிறது. இதனால் இரவு நேரங்களில் வேலாயுதம்பாளையம் பகுதியில் இருந்து நொய்யல் பகுதிக்கு செல்லும் வாகனங்கள் குடிநீர் கைப்பம்பு இருப்பது தெரியாமல் அதில் மோதி விபத்து ஏற்பட்டு வருகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.